Monday, August 22, 2011

சாம்பார் வைப்பது எப்படி ஆண்களுக்கு மட்டும்




Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது...
(Ranahasuran Sambar Tips Are Subject to Kaaikari Market Risks - Please Read The Conclusion Carefully Before Cooking)











சில மாதங்களுக்கு முன் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை எப்படி என்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...


சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)

4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி


இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஆயில்
9) உப்பு


குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது )


இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவி பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்... இனி செய்முறை...



குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால்... அது தேவையான அளவுதான் ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை'  ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது...   (நோட்ஸ்: சமைப்பதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நாறிவிடும்), விடுவானா ரணஹாசுரன்? நண்பர் வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... 

திடீரென்று மின்சாரம் போய்விட்டது, தன்னம்பிக்கை இழக்கவில்லை ரணஹாசுரன். (அட துரோகிகளா)



 "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்...

மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவெடுத்தேன்... 



அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது...  நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன், நிதானம் தேவை)


 ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்... கொஞ்சம் புளியை தண்ணீரில் கரைத்து, கரைத்த நீரையும் அதனுடன் சேர்த்தேன்...


தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...
ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...


சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரணஹாசுரா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30PM. அடப்பாவிகளா :(  ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...


டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...


(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..



சாம்பார் வைசேனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை... :( 

ரணஹாசுரன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் வைப்பது எப்படி?" பதிவில் தொடரும்...

எங்கே இருந்தோ ஒரு அசரீரி எனக்கு கேட்டது...

அது "டேய் சொம்மா வருவாளா சுகுமாரி?" என்பதுதான்...









சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் கட்டை விரல் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... சுருங்க கூறின் ஒரு நாள் கூத்தில் புது டிரௌசர் கிழிந்தது...


இந்த கதை மூலம் நான் சொல்ல வர்றது என்னான்னு நீங்க கேட்டிங்கன்னா....

"பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயகூடாது" 

1 comment:

  1. கலக்கீட்டீங்க பாஸ்


    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete